கேள்வி
மாப்பிள்ளை வீட்டில் நிறைய காலி இடம் உள்ளது
பார்த்து வந்த அப்பா சொன்னார்கள்
புதிய வீடு கட்ட அம்மா ஆசைப்பட்டாள்.....
தோட்டம் போடலாம் என அண்ணன் ...
தனிக்குடித்தன ஆசை மதினி விதைத்தது....
போகிற இடத்தில் எல்லோருடனும்
சினேகமாய் இருக்க யாரும்
சொல்லித் தரவில்லையே?????