Friday, March 23, 2018

தெய்வ தரிசனம்
காலையில் நாலு மணிக்கே எழுந்து
கோவிலுக்கு சென்று
சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்து...
எனக்கு முன்னமே
வரிசையில் நிற்பவர்களின் பின்னால்
நானும் இணைந்தேன்...
மூன்று மணி நேர
நகர்விற்குப் பின்
சன்னிதியில் போய்ச் சேர்ந்தோம்...
சன்னிதியில் தெய்வம் இல்லை!
அர்ச்சகர்களின் அதிகார
துஷ்ப்ரயோகமும்
பக்தர்களின் தாங்க முடியாத
கேட்கக்கூடாத
சப்தங்களின் இரைச்சலும்
தெய்வத்தைத்தான் துரத்தி விட்டனவோ
என்னவோ?
புகைப்படக் கவிதை - சிட்டுக்குருவி

காற்று வெளியிடை பறந்தாலும்
மின்சார கம்பியில் அமர்ந்தாலும்
வயல்வெளியில் இருந்தாலும்
எப்பொழுதும்
என் மகனின்
காமிரா சிறைக்குள்.....